தனித்திருந்து விழித்திருந்து
பழகிப்போன எனக்கு இப்போது
தனித்திருப்பதும் விழித்திருப்பதும்
பெரிதாய் ஒன்றும் தெரியவில்லை…!
1 of 15

பேசாத மௌனங்கள் குழந்தை போல் ஆனதே.
இரவோடு கண்ணீரும் கானல் நீர் ஆனதே.
அன்பும் ஆதரவும் மருந்தாகி போனதே.
என் தனிமைக்கு துணை யாரும் இல்லாமல் போனதே.
2 of 15
ஆறுதலுக்கும் ஆதரவுக்கும் துணை
இல்லாத போது தான் தெரியும்
அன்பின் அருமையும்
தனிமையின் கொடுமையும்…!
4 of 15
கனவில் வாழும் வாழ்க்கை,
விடிந்தவுடன் முடிந்து விடும். ஆனால்,
காலத்தால் கிடைக்கும் வாழ்க்கை
கடைசி வரை உன்னுடன் இருக்கும்.
எனக்கு காலத்தால் கிடைத்த வாழ்க்கை
தனிமை தான் போலும்…!
5 of 15
உன் நினைவுகளும் உன் கை கோர்த்த
சுகமான நிமிடங்களும் தான்
நீ இன்றி போனாலும் என்
தனிமையை இனிமை ஆக்குகின்றன.
12 of 15
தனிமை ஒன்றும் எனக்கு புதிதல்ல!
தனிமைக்கும் நான் புதிதல்ல!
புதுமையெல்லாம் என்னை
புதிதாய் பார்ப்பவர்களுக்கு தான்.
14 of 15













