Type Here to Get Search Results !

விட்டு விட மாட்டேனடா என்னவனே... Tamil Kadhal Kavithai...

நான் உன்னை நேசித்தேன்
என்பதை விட
உன்னால் நேசிக்கப் பட்டேன்
என்பதே எனக்கு கர்வம்...

உன்னை நேசித்த இதயத்தில்
வேறு ஒரு நேசம் கொண்டுவிட்டால்
நான் தாசி என ஆகிவிட மாட்டேனா??!!??
என்னை பொருத்தவரையில்
கெட்டுப் போவது
உடலுக்கு மட்டும் அல்ல உள்ளத்திற்கும் தான்...

நீ என்னிடம் காட்டிய நெருக்கத்தில்
உன்னை முழுவதுமாய் சுவாசித்து விட்டேன்...
கருவாய் வாழ்கிறது உன் சுவாசம்
என் இதயத்தில்...
பெயர் சூட்டி இருக்கிறேன்
காதல் என
உன் பெயரோடு சேர்த்து...

இந்த கருவினை
பத்து திங்களில்
இறக்கி விட முடியாது
என்னவனே...
இன்னுயிரை
மண்ணில் புதைக்கும்
வரையிலும் விட்டு
விட மாட்டேனடா!!!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad