Type Here to Get Search Results !

வாழ்க்கைக்கு உதவும் சிந்தனைகள்... Ponmozhikal...


நண்பர்களே பிடிச்சிருந்தா பகிர்ந்து கொள்ளுங்கள். 
1. சில காயங்கள் " *மருந்தால்* " சரியாகும்.
சில காயங்கள் " *மறந்தால்* " சரியாகும்.

2. " *ஆடம்பரம்* " அழிவைத்தரும். " *ஆரோக்கியம்* " நல்வாழ்க்கை தரும்.

3. மனிதனுக்கு " *பிரச்சனை* " அதனால்,
கடவுளுக்கு " *அர்ச்சனை* ".

4. " *வறுமை* " வந்தால் வாடக்கூடாது.
" *வசதி* " வந்தால் ஆடக்கூடாது.

5. " *வீரன்* " சாவதே இல்லை.
" *கோழை* " வாழ்வதே இல்லை.

6. தவறான பாதையில் " *வேகமாக* " செல்வதைவிட.
சரியான பாதையில் " *மெதுவாக* " செல்லுங்கள்.

7. நீ " *ரசிக்க* " என்னிடம் அழகு இல்லை. ஆனால்,
நீ " *வசிக்க* " என் இதயத்தில் இடம் இருக்கிறது.

8. மனிதனுக்கு ABCD " *தெரியும்* " ஆனா *"Q"* ல போகத் "தெரியாது".
எறும்புகளுக்கு ABCD " *தெரியாது* " ஆனா *"Q"* ல போகத் "தெரியும்".

9. ஆயிரம் பேரைக்கூட " *எதிர்த்து* " நில்.
ஒருவரையும் " *எதிர்பார்த்து* " நிற்காதே.

10. தேவைக்காக கடன் " *வாங்கு* ".
கிடைக்கிறதே என்பதற்காக " *வாங்காதே* ".

11. உண்மை எப்போதும் " *சுருக்கமாக* " பேசப்படுகிறது.
பொய் எப்போதும் " *விரிவாக* " பேசப்படுகிறது.

12. " *கருப்பு* " மனிதனின் இரத்தமும் சிவப்புதான்.
" *சிவப்பு* " மனிதனின் நிழலும் கருப்புதான்.

13. நீ கல்யாணம் பண்ணிக்கனும்னு நெனைக்கிறது " *ஆசை* ". ஆனால்,
அதுக்கு பிறகும் சந்தோஷமா இருக்கனும்னு நெனைச்சா அது " *பேராசை* ".

14. " *கடினமாய்* " உழைத்தவர்கள் முன்னேறவில்லை.
" *கவனமாய்* " உழைத்தவர்கள் முன்னேறியுள்ளனர்.

15. வியர்வை துளிகள் " *உப்பாக* " இருக்கலாம். ஆனால்,
அவை வாழ்க்கையை " *இனிப்பாக* " மாற்றும்.

16. " *கடனாக* " இருந்தாலும்சரி,
" *அன்பாக* " இருந்தாலும் சரி, திருப்பி செலுத்தினால்தான் மதிப்பு.

17. " *செலவு* " போக மீதியை சேமிக்காதே.
" *சேமிப்பு* " போக மீதியை செலவுசெய்.

18. உன்னை நீ செதுக்கி கொண்டே இரு " *வெற்றி* " பெற்றால் சிலை, " *தோல்வி* " அடைந்தால் சிற்பி.

19. " *உயிருள்ள* " உறவினர்களில் யார் முக்கியம் என்பதை " *உயிரற்ற* " பணமே முடிவு செய்கிறது.

20. கடன் கொடுத்துப்பார் நீ எவ்வளவு " *முட்டாள்* " என்று தெரியும்.
கடன் கேட்டுப்பார் அடுத்தவன் எவ்வளவு
" *புத்திசாலி* " என்பது புரியும்.

21. பணம் கொடுத்துப்பார் உறவுகள் உன்னை " *போற்றும்* ".
கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுப்பார் மண்ணை வாரி
" *தூற்றும்* ".

22. பேசிப்பேசியே நம்மை ஏமாற்றுகிறார்கள் என்பதெல்லாம் " *பொய்* ".
அவர்கள் பேச்சில் நாம் ஏமாந்து விடுகிறோம் என்பதே " *உண்மை* ".

23. மனைவி கேட்பதை எல்லாம் வாங்கி கொடுத்து சமாளிப்பவன் " *புத்திசாலி* ".
வாங்கி கொடுக்கிறேன் என்று சொல்லியே சமாளிப்பவன் " *திறமைசாலி* ".

24. " *பாதி* " கவலைகள் கற்பனையானவை.
" *மீதி* " தற்காலிகமானவை.

25. குறைகளை " *தன்னிடம்* " தேடுபவன் தெளிவடைகிறான்.
குறைகளை " *பிறரிடம்* " தேடுபவன் களங்கப்படுகிறான்.

26. அறுந்து போன செருப்புக்கு வீட்டில் ஒரு இடம் " *உண்டு* ".
இறந்து போன மனித உடலுக்கு வீட்டில் ஒரு இடமும் " *இல்லை* ".

27. விழுதல் என்பது " *வேதனை* ".
விழுந்த இடத்தில் மீண்டும் எழுதல் என்பது " *சாதனை*".

 நண்பர்களே பிடிச்சிருந்தா பகிர்ந்து கொள்ளுங்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad