22+ சோகக் கவிதைகள் – Sad Quotes In Tamil 2024

Sad Love Quotes In Tamil | காதல் சோகக் கவிதைகள்


என் வாழ்வினில் நீ பாதி என்று
சொல்லிக் கொண்டே இருப்பாய்..!
அப்போது புரியவில்லை அர்த்தம்..!
இப்போதுதான் புரிகிறது அர்த்தம்..!
பாதியிலேயே விட்டு செல்வது தான்
நீ சொன்ன அந்த பாதி என்று💕💔…!

1 of 22
Tamil sad love kavithai image


உன் நினைவுகளோடு, நீ பிரிந்து
சென்ற பின்பும் பேசுகின்றேன்.
மௌனம் என்னும் வார்த்தைகளால்,
என் கண்கள் சிந்தும் கண்ணீரோடு.

2 of 22
Tamil love sad quote image

நினைவுகள் என்னும் தீயை
நெஞ்சில் வைத்து கொழுத்தி விட்டு விட்டு
நிம்மதியாக நீ சென்றுவிட்டாய்!
நித்தம் நித்தம் நினைத்து பற்றி எரிவது
என் உள்ளம் தானே! என் உயிரே.!

3 of 22
Tamil kadhal soga kavithai

காற்று கூட கலங்குகிறது
என் கவலை கண்டு.
ஆனால், நீயோ! என்னை விட்டு
விலகிச் செல்கிறாய்.
என்னை தனியே தவிக்கவிட்டு.

4 of 22
Tamil sad love quote

உள்ளம் மகிழ்ந்து உன் மீது
நான் கொண்ட காதல்,
உருகி வழிகிறதே விழிநீராய்!

5 of 22
Sad love quote tamil


எனக்கு நீ கிடைத்தது வரம் தான்
இன்றும் என்றும் என்றென்றும்.
ஆனால், நான் தான் உனக்கு
ஏனோ பாரம் ஆகி விட்டேன்..!.?
நீ இல்லை என்றால் என்ன எனக்கு!
நீ தந்து சென்ற நினைவுகள் போதும்மடி.!

6 of 22
Tamil sad love kavithai


உயிர்த் துடிப்புகளுடன் பல
நடமாடும் கல்லறைகள் வாழ்ந்து
கொண்டு தான் இருக்கின்றன.
காதலின் வலிகளை சுமந்து கொண்டு.

7 of 22
Love sad kavithai


காலங்கள் பல கடந்தாலும் உனக்காக
என் இதயத்தில் ஒதுக்கப்பட்ட இடம்!
வெற்றிடமாகத் தான் இருக்கும்!
காரணம் நீ விட்ட வெற்றிடத்தை
நீ தான் நிரப்ப வேண்டும்! இல்லை,
உன் நினைவுகள் நிரப்பிவிட்டு போகட்டும்.

8 of 22
Sad love quote Tamil


நீ இல்லா என் நினைவுகள்
பாலைவன சுடு மணல் போன்றவை!
நீ இல்லா நான் வாழும் வாழ்க்கை
பாலைவனத்தில் நீர் தேடி அலையும் ஒரு
பறவையின் உயிர் பிரியும் தருணம் போன்றது!

9 of 22
Tamil sad love quote


உயிரினும் மேலாக ஒருவரை நம்பி.
அவரின் மாற்றங்களினால்
மாறும் நிலைக்கு தள்ளப்படும்
இதயத்தின் வலிகள் என்றுமே
தீராத மௌனராகங்கள்………..!

10 of 22
காதல் சோகக் கவிதை


தேடி தேடி அலையும்
௭ன் விழிகள் தேயுதடி.
நீ ௭ன்னை தேடாமல்
கடந்து செல்லும் போது!

11 of 22
Kadhal manam


காதல் என்பதனை கற்பனை
செய்வது எளிது தான்.
ஆனால், அதன் வலியை
காதலித்தவர் மட்டுமே உணர முடியும்.

12 of 22
Love pain tamil quote


ஆழ் கடலில் விழ்ந்து மாய்ந்தாலும்
நீ தந்த அழியாத சோகங்கள்
மனதில் நிலைத்திருக்கும் போலும்.

13 of 22
Tamil sad quote


உன்னை மறக்கவும் மணக்கவும்
முடியாத பாவியடி நான்…!
அழியாத சோகத்தை என்னில் சுமந்து
உன் நினைவுகளை மனதில் சுமந்து
வாழ்கிறேன் தனிமையில்…!

14 of 22
Sad Tamil love quote for girlfriend


அளவில்லா உன் அன்பு
கடைசியில் கண்ணீர் தந்து
காணாமல் போனது ஏனோ.?
கலங்கியது என் கண்கள் மட்டும்
அல்ல என் இதயமும் தான்…!

15 of 22
கண்ணீர் காதல் கவிதை


என் காதல் கவி வரிகள் புரிந்த உனக்கு,
வலி வரிகள் புரியாமல் போனது ஏனோ..!
அன்பு கொண்டது என் தவறும் அல்ல.
பிரிந்து சென்றது உன் தவறும் அல்ல.
காதல் காயம் காலம் வரை தொடருமே…!

16 of 22
Tamil Kadhal vali kavithai


காதலி உன்னை கவி வடித்து
காதல் செய்தேன்…!
காற்றோடு சென்று விட்டாய்.
கவியே காதலாக மாற்றம் கண்டது.
நான் என் கவிக்குள் மூழ்கி விட்டேன்.

17 of 22
Tamil sad Kadhal kavithai


Sad Life Quotes In Tamil | வாழ்க்கை சோகக் கவிதைகள்


கலைந்து போன கனவுகளுக்கு
கற்பனைகளின் உயிரூட்டி
கொண்டிருக்கிறேன்.
கண்ட கனவுகளை
கற்பனையிலாவது வாழ்ந்து
விட வேண்டும் என்பதற்காக.

18 of 22
Tamil sad quote for life


வார்த்தைகள் கேட்பார் இன்றி
மௌனமானது என் வாழ்க்கை,
என் உணர்வுகளை கூற கிடைத்த
கடைசி வாய்ப்பு என் கண்ணீரும்
இந்த கவிதையும் தான்😂😂😂…!

19 of 22
Sad life quote in tamil


அம்மா வலியோடு நான்வாழ
வலியோடு பிரசவித்தாயோ அம்மா.
வலிக்கிறது உன் பிரசவவலியைவிட
பிறர் தரும் வேதனை வலி.
உனக்கு வலிதந்த நான் உன் கருவறையிலேயே
கல்லறையாகி இருக்க மாட்டேனோ ஏங்குகிறேன் இப்போது.

20 of 22
Valkkai soga kavithai


இனி இழப்பதற்கு ஒன்றும் இல்லை
என்னும் போது தோன்றியது.
“வாழ்க்கை போகும் தூரம் வரை
நானும் போக வேண்டும்”…!

21 of 22
Sad Tamil life quote


Tamil Inspiration Life Quote


நண்பா தொலைந்த வாழ்வினை
தேடிக்கொண்டு இருக்காது
தொடரும் வாழ்வினில்
உன் கால் தடம் பதித்து விடு.
வானம் போல் உலகம்
அண்ணாந்து பார்க்கும் உன்னை.

22 of 22
Tamil inspiration life quote

Leave a Comment