பொங்கல் வாழ்த்து கவிதை | Happy Pongal Tamil | பொங்கல் ஸ்டேட்டஸ் | போகி பொங்கல் வாழ்த்து | தை பொங்கல் வாழ்த்து | மாட்டு பொங்கல் வாழ்த்து | உழவர் திருநாள் வாழ்த்து | தமிழர் திருநாள் வாழ்த்து
வெறுப்பை தீயிட்டு பொசுக்கி, பகைமை களைந்து, அன்பை பேணி, பகைவனையும் நண்பனாக்கி, கொண்டாடி மகிழ்ந்திடுவோம்! *போகி பொங்கல் வாழ்த்துக்கள்!*
*போகி பொங்கல் வாழ்த்துக்கள்!* எதிர்மறை எண்ணங்களை விடுத்து, நேர்மறை எண்ணங்களை விதைப்போம்! வெற்றி அறுவடை ஆகும்!
செவ்விதழ் திறந்து, செந்தமிழ் பேசும், செந்தமிழ் உறவுகளுக்கு: *தை பொங்கல் வாழ்த்துக்கள்!*
மழைக்கும், மண்ணுக்கும், உழுது, விதைத்து, உணவை கொடுக்கும் உழவனுக்கும், சிறு உயிர் உட்பட உழவனுக்கு உதவிய அனைவருக்கும் இந்த நல்ல நாளில் நன்றிகள்! தை பொங்கல் வாழ்த்துக்கள்!
இல்லங்களில் பொங்கல் பொங்கிட, உள்ளங்களில் ஆனந்தம் பொங்கிட, உங்களுக்கு என் உள்ளம் பொங்கும், *இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!*
காலம் பல மாறினாலும், ஆட்சிகள் பல வந்தாலும், காட்சிகள் பல தந்தாலும், சாட்சி சொல்லி நிற்கும் ஓர் நாள், அது என்றும் மாறாத எம் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள்! *தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!*
வருகிறது ஒரு திருநாள்! மண் காத்து, மலை காத்து, உழவையும் உழவனையும் காத்து, பொங்கலிட்டு புன்னகை பொங்க கொண்டாடிடுவோம்! *தை பொங்கல் வாழ்த்துக்கள்!*
உள்ளம் மகிழ, இல்லம் நிறைய, அனைவருக்கும் *பொங்கல் நல் வாழ்த்துகள்!* பொங்கலோ பொங்கல்!
இந்த மங்கலமான நன்னாளில் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் இனிய பொங்கல் மங்கலங்கள்!
இல்லத்தில் பொங்கலிட்டு மகிழும் உறவுகளுக்கு, உள்ளத்தில் இருந்து இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!
இன்று முதல், என்றும் இல்லா அளவில், இல்லா செல்வங்களும், எல்லா செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ்ந்திடுக! *தை பொங்கல் வாழ்த்துக்கள்!*
அனைவர் இல்லமும் உள்ளமும் மகிழ்ச்சியால் பொங்கிட பொங்கல் நல் வாழ்த்துக்கள்!
உழுது விதைத்தால் அறுவடை நிச்சயம்! எழுந்து முயற்சித்தால் வெற்றி நிச்சயம்! *பொங்கல் நல் வாழ்த்துக்கள்!*
தமிழை, உயிராய், உணர்வாய், உயர்வாய், உணரும் உடன்பிறப்புகளுக்கு: *தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!*
தமிழை உயிராக நினைக்கும் தமிழனுக்கும், அனைத்து தமிழர்களையும் உறவாக நினைக்கும் தமிழர்களுக்கும்,
*தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!*
இவ்வுலகில் தாய்ப்பால் அருந்தாமல் வளர்ந்தவர் பலர், பசும்பால் அருந்தாமல்
வளர்ந்தவர் இலர்! *மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்!*
சிங்கம் போல் சீறி வரும் காளையை, சிங்கமென பாய்ந்து அடக்கும் காளையருக்கு, *மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்!*
உலகில் உயர்ந்த சாதி என்று மார்தட்டி சொல்லும் தகுதி படைத்த ஒரே சாதி உழுது விதைத்து பசியாற்றும் விவசாய சாதி தான்!
*உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!*
நோய்க்கு மருந்தளித்து உயிர் காக்கும் மருத்துவர் கடவுள் என்றால்,
அந்த மருத்துவருக்கே உணவளித்து உயிர் காக்கும் உழவன் மிக மிக உயர்ந்த கடவுள்!
*உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!*
உலக உயிர்களுக்கு உணவூட்டி, உயிரூட்டும், உழைப்பும், உழவும், உழவனும், உயர்ந்தவர்கள்! *உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!*
உழவும் உழவனும் இல்லை என்றால் உடலுக்கு உணர்வில்லை உயிருக்கு உடலில்லை! இதை உணராதோர் மனிதனே இல்லை! *உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!*