வணக்கம் நண்பர்களே! LikeMyStatus இணையதளத்திற்கு உங்களை மனமார வரவேற்கிறோம்!
“Tamil Alone Quotes” தேடிக்கொண்டிருப்பவர்கள், உங்கள் உணர்வுகளை வார்த்தைகளில் பேசச் செய்யும் தனிமை கவிதைகள் இங்கே உள்ளன. மனதின் அமைதியையும், யாருக்கும் கூற முடியாத உணர்வுகளையும் வெளிப்படுத்தும் இந்த வரிகள், உண்மையான தனிமையின் அழகையும் வேதனையையும் அழகாக சொல்கின்றன.
இந்த கவிதைச் சொற்களில் நீங்கள் காணலாம்: Alone Life Quotes in Tamil, Sad Tamil Quotes about Loneliness, Deep Feeling Quotes in Tamil, Whatsapp Status on Loneliness in Tamil, Silent Quotes in Tamil, Broken Heart Lines in Tamil, மற்றும் Emotional Tamil Alone Quotes. இந்த வரிகள் உங்கள் உள்ளத்தோடு பேசும் அந்த நொடியை உணரச் செய்யும்.
Tamil Alone Quotes
தனிமை என்பது தவிப்பு.
துணையை தேடும் துடிப்பு.
1 of 15
வாழ்க்கையின் பாதி பயணத்தில்
திரும்பி பார்த்தேன்.
உடன் வந்து கொண்டு இருப்பது
என் நிழல் மட்டுமே.
ஏன் என்று யோசித்தேன் பணம்
என்று தோன்றியது.
பணம் இல்லை என்றால்
பிணம்தானோ மனிதம்…!!!!
2 of 15
ஒருவனுக்கு ஒருத்தி என்று
எழுதி வைத்த இறைவன்.
அந்த ஒருத்தியை தவிர
அனைவரையும் காட்டிவிட்டான்
💃கண் எதிரே🚶…!
3 of 15
வாழ்க்கை என்னும் வரைபடத்தில்
சந்தோஷம் என்னும் நதியை தொலைத்து.
😱😱கவலை என்னும் தீவில்😱😱,
கரை ஒதுங்கி நிற்கிறேன்.
🚶🚶ஒரு தனி மரமாக🚶🚶.
4 of 15
தனிமையை நினைத்து
கவலை கொள்ளாதே.
தனிமைதான் உலகத்தையும்
வாழ்க்கையையும் புரிய வைக்கும்.
5 of 15
சிலர் எட்டி உதைத்த பிறகும்.
பலர் விட்டு விலகிய பின்பும்.
ஆறுதலுக்கு எவரும் இல்லை
என்று ஆன பிறகும்.
நீ என்னோடு வா என்று அழைக்கும்
ஓர் உறவென்றால் அது தனிமை மட்டுமே.
6 of 15
நெடுஞ்சாலை கூட கண்ணீர் வடிக்கிறது.
உன் கை கோர்த்து நடந்த சாலையில்,
நான் தனிமையில் நடப்பதை கண்டு.
7 of 15
உன்னை சுமந்து நெஞ்சில்,
வேறு ஒருவரை சுமக்க விரும்பாமல்.
உன் நினைவுகளை மட்டுமே சுமப்பதால்,
தனிமை எனக்கு சொந்தமாகிப் போனது.
8 of 15
தனிமை கொடுமை தான்,
இருந்தாலும்,
அதில் காயம் இல்லை,
காயப்படுத்த யாரும் இல்லை.
என்பதால், அது இனிமை தான்…!
9 of 15
உரிமையோடு சிலரை
உறவென்று நினைத்தது
தவறென்று புரிந்த போது.
தனிமை உரிமை ஆனது.
10 of 15
யார் சொன்னது நான் தனிமையில்
வாடுகிறேன் என்று.
நான் ஒன்றும் தனிமையில் வாடவில்லை.
நான் உன் நினைவுகளுடன் வாழ்கிறேன் தனிமையில்.
11 of 15
ஓ என்று தனிமையில் அழ
வேண்டும் போல் உள்ளது.
நேசம் வைத்து நாசமாய் போன
இந்த பாழாய் போன மனதுக்கு.
பிறரிடம் சொல்லி அல்ல.
தனிமையை எண்ணி,
தனிமையை அள்ளி,
தனிமையிடம் சொல்லி அழ வேண்டும்.
இனி யாரையாவது நேசிப்பாயா என்று.
12 of 15
காதலை காதல் செய்தேன்.
தனிமையை பரிசானது.
தனிமையை காதல் செய்தேன்.
அது தந்த பரிசு இந்த கவிதத்துவ வரிகள்.
13 of 15
தனித்து இருப்பதே தனி சுகம் தான்.
நிழலோடு பேசிக் கொண்டு நீண்ட தூரம் போகலாம்!
கற்பனைக்கு உயிர் கொடுத்து கவிதை கிறுக்கலாம்!
யாரும் அறியாத நினைவை திறந்து பார்த்து ரசிக்கலாம்!
நம்முள் நம்மை தேட..! நிச்சயம்
தனிமை சிறந்தது..!
14 of 15
தனிமையை பகிர்ந்திட
துணையொன்று தேடினேன்,
இணைகொண்ட மனங்களும்
துணை வர தயங்கவே!
துணிந்தே ஏற்க்கின்றேன்
தனிமையை துணையென…!
15 of 15
தனிமையில் தோன்றும் எண்ணங்கள் தான் மனதை ஆழமாக தொடக்கூடியவை. இந்த தனிமை கவிதைகள் – Tamil Alone Quotes உங்கள் அமைதியான உணர்வுகளை பிரதிபலித்து, ஒரு மென்மையான ஆறுதலாக திகழும். ஒருபோதும் மறந்துவிடாதீர்கள் – தனிமை ஒரு தனிப்பட்ட அழகு கொண்டது!